Latest Post
Showing posts with label இரத்ததானம். Show all posts
Showing posts with label இரத்ததானம். Show all posts
இரத்ததான முகாம் - திருநாகேஸ்வரம் கிளை
ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலகில் எல்லா மனிதனையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற திருக்குர்ஆன் (5:32) வசனத்திற்கேற்பவும், மனித நேயம் மறைந்த வருகின்ற இன்றைய காலத்தில் மனித உயிர் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்திடவும், மாட்டிற்காக மனிதனை கொலை செய்யும் மனித நேயம் அற்றவர்கள் மனித உயிரின் மதிப்பை அறிந்திடவும், இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது என்ற நபிமொழிக்கேற்பவும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை மற்றும் காளி இரத்த வங்கி கும்பகோணம் இணைந்து தொழிளாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2017 திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் பள்ளிவாசல் தெரு அபுல் கலாம் ஆசாத் இல்லத்தில் இரண்டாவது மாபெரும் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட செயலாளர் நூருல் ஹக் அவர்கள் தலைமை வகித்தார்கள். மாவட்ட மருத்துவரணி செயலாளர் சாகுல் அவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக Dr.H முஹம்மது நியாஸ் MD (Physician) F.C.Diab.. அவர்களும், ER. மாதவன் TNEB உதவி செயற்பொறியாளர் (சார்பு) அவர்களும், K.V. கிருபாலாணி வருவாய் ஆய்வாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
எங்களால் முடிந்தவரையில் பலருடைய உயிர் காப்பாற்ற படுவதறக்கு எங்களுடைய பங்கும் அதில் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உள்ளவர்கள். இதில் ஆர்வமுடனும் மனித நேயத்துடனும் 51 நபர்கள் கலந்துக்கொண்டு தங்களது குருதியை தானமாக வழங்கினார்கள்.
இறுதியாக கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறப்பட்டு நிகழ்ச்சி இனிதாக நிறைவுப்பெற்றது.
47 இரத்த தானம் திருப்பனந்தாள் கிளையில் வழங்கினார்கள்
#முஹம்மதுர்_ரஸூலுல்லாஹ்
#தஞ்சை_வடக்கு_மாவட்ட_மாநாடு
#பிப்ரவரி_11_2017
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை வடக்கு மாவட்டம்
திருப்பனந்தாள் கிளை
நாள் : 18.12.2016
தலைமை :
சாகுல் - மாவட்ட மருத்துவரணி செயலாளர்
சிறப்பு அழைப்பாளர் : Dr. அருண் இளவழகன்
நன்றியுரை : இம்ரான் - கிளை மருத்துவரணி
இரத்த தானம் : 47 நபர்கள்
41 நபர்கள் இரத்ததானம் - திருநாகேஸ்வரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு திருநாகேஸ்வரம்
கிளை சார்பாக 06/03/2016 அன்று TNTJ கிளை மர்கஸில் காலை 10 மணிக்கு மனித உயிர்
காக்கும்
இரத்ததான முகாம் தஞ்சை வடக்கு
மாவட்ட துணை தலைவர் நூருல் ஹக்தலைமையில் மாவட்ட மருத்துவரணி மற்றும்
கிளை
நிர்வாகிகள் முன்னிலையில்
நடைபெற்றது....
இரத்ததான முகாமில் துவக்க உரையாக
தஞ்சை வடக்கு மாவட்ட மருத்துவரணி
செயலாளர் சகோதரர் சாகுல்
அவர்கள் "இரத்ததானத்தின்
முக்கியத்துவம்" என்ற
தலைப்பில் இரத்ததானம் செய்வதில்
தவ்ஹீத்
ஜமாஅத் பங்கு குறித்து
விளக்கினார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக
கலந்துகொண்ட டாக்டர்.முகமது நியாஸ் அலி அவர்கள் "இரத்ததானத்தால் ஏற்பாடும் நன்மைகள்" குறித்து விளக்கினார்.
இதில் 41 நபர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு குறுதி கொடை வழங்கினார்.
கிளை து.செயலாளர் கலந்தர் அவர்கள் நன்றியுரை கூறி இரத்ததான
முகாம்
நிறைவடைந்தது..
இரத்ததான முகாமில் திருநாகேஸ்வரம் கிளை
மருத்துவரனி செயலாளர் சஹதுல்லா கான்
மற்றும் கிளை
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
இரத்ததான முகாம் 62 நபர்கள் குருதி கொடை - இராஜகிரி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை சார்பாக 21.02.2016 அன்று தஞ்சை இராஜா மிராசுதாரர் அரசு மருத்துவ மனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.
மாவட்ட து.செயலாளர் சையது சுல்தான் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சிறப்பு அழைப்பாளர்களாக G.கலைச்செல்வன் (காவல் துணை கண்காணிப்பாளர் ) அவர்களும் Dr.லதா M.B.B.S. அவர்களும் கலந்துகொண்டனர். கலந்துக்கொண்ட மாற்று மத சகோதர,சகோதரிகளுக்கு இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதில் 62 நபர்கள் கலந்துகொண்டு குருதி கொடை வழங்கினார்கள்.
மாபெரும் இரத்ததான முகாம் - குடந்தை நகர கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குடந்தை
நகர கிளை சார்பாக சுதந்திர தினத்தன்று மாபெரும் இரத்ததான முகாம் அப்துல்
மாலிக் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகமான குடந்தை
மர்கஸில் 15.08.2015 அன்று நடைப்பெற்றது.இதில் குடந்தை நகர நிர்வாகிகள்
முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மா.கோவிந்த ராவ் IAS (சார் ஆட்சியர் கும்பகோணம்) அவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இரத்ததான முகாமில் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு 59 நபர்கள் குருதிக்கொடை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட ,கிளை நிர்வாகிகள் மற்றும் அருகாமையிலுள்ள கிளை
உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் M.சாதிக் பாட்சா நகர செயலாளர் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.




















