ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலகில் எல்லா மனிதனையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற திருக்குர்ஆன் (5:32) வசனத்திற்கேற்பவும், மனித நேயம் மறைந்த வருகின்ற இன்றைய காலத்தில் மனித உயிர் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்த்திடவும், மாட்டிற்காக மனிதனை கொலை செய்யும் மனித நேயம் அற்றவர்கள் மனித உயிரின் மதிப்பை அறிந்திடவும், இஸ்லாம் என்பதே பிறர் நலம் நாடுவது என்ற நபிமொழிக்கேற்பவும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை மற்றும் காளி இரத்த வங்கி கும்பகோணம் இணைந்து தொழிளாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2017 திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் பள்ளிவாசல் தெரு அபுல் கலாம் ஆசாத் இல்லத்தில் இரண்டாவது மாபெரும் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட செயலாளர் நூருல் ஹக் அவர்கள் தலைமை வகித்தார்கள். மாவட்ட மருத்துவரணி செயலாளர் சாகுல் அவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக Dr.H முஹம்மது நியாஸ் MD (Physician) F.C.Diab.. அவர்களும், ER. மாதவன் TNEB உதவி செயற்பொறியாளர் (சார்பு) அவர்களும், K.V. கிருபாலாணி வருவாய் ஆய்வாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
எங்களால் முடிந்தவரையில் பலருடைய உயிர் காப்பாற்ற படுவதறக்கு எங்களுடைய பங்கும் அதில் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் உள்ளவர்கள். இதில் ஆர்வமுடனும் மனித நேயத்துடனும் 51 நபர்கள் கலந்துக்கொண்டு தங்களது குருதியை தானமாக வழங்கினார்கள்.
இறுதியாக கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறப்பட்டு நிகழ்ச்சி இனிதாக நிறைவுப்பெற்றது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !