தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமாக அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியில், மாணவிகளின் பேச்சுத் திறனை வளர்க்கும் முகமாக பல்வேறு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில், தீன்யாத், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவிகளின், - மக்களிடையே தூய குர்ஆன் - ஹதீஸ் கருத்துக்களை ஆணித்தனமாக எடுத்து வைக்க ஏதுவாக, பேச்சுப் பயிற்சி மற்றும் போட்டிகள் 05.02.11 சனிக்கிழமை அன்று நடத்தப்பட்டன.
அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட துணைத் தலைவருமான சகோ. ஜாஃபர் தலைமையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரியாத் TNTJ மண்டல செயலாளரும், அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு ரியாதின் தலைவருமான சகோ. ஃபெய்ஸல் அவர்கள் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
மாணவிகள் "சைத்தானின் சூழ்ச்சிகள்", "இஸ்லாம் மனதில் நிற்க வில்லையே!", "நஃபீலான வணக்கங்கள்" மற்றும் பல தலைப்புகளில் உரையாற்றினர்.
எவ்வாறு பேச்சினூடாக வாதங்களை எடுத்து வைக்க வேண்டும், கேட்கும் மக்கள் சோர்வடையாமல் எவ்வாறு அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேச வேண்டும்; குர்ஆனில் அறிவியல் ஆதாரங்களை எவ்வாறு எடுத்துறைக்க வேண்டும் முதலான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தீன்யாத் (அடிப்படை) பயிற்சியில் சேர்ந்து சில தினங்களே ஆன மாணவிகளும் இதில் பங்கு பெற்றது அவர்களது ஆர்வத்தையும், திறனையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியாக, மாணவிகளின் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் வசதிக்காக அவர்களின் தேவைகள் என்ன, இன்னும் அதிகமான ஹதீஸ் கிரந்தங்கள், கம்ப்யூட்டர்களின் தேவைகள் போன்றவை மாணவிகளிடம் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டன. மேலும், தேவையான உபகரணங்களும் வாங்க முயற்சிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !