தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 21.03.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில பேச்சாளர் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் மௌலூதும், மீலாதும் என்ற தலைப்பிலும் சோழபுரம் தவ்ஹீத் பள்ளி இமாம் S. உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இறுதிப் பேருரை என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் A.S.அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட து.செயலாளர் M.அக்பர் அலி, கிளை தலைவர் A.கபீர் அகமது, கிளை செயலாளர் A.M.ஜுபைர், கிளை பொருளாளர் A.அப்துல் மாலிக், சோழபுரம் UAE கிளை தலைவர் A.முஹம்மது பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பேச்சாளர் H.அன்சார் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
_________________________________________________
Home »
சன்னாபுரம்.
» சோழபுரம் கிளையில் நடைப்பெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !