தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 20.03.10 சனிக்கிழமை அன்று சேனியர் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் Z.முஹம்மது நுஃமான் அவர்கள் மௌலூது நபி வழியா? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் M.முஹம்மது ரியாஜ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் A.ஷாஜஹான் மற்றும் துபை மண்டல வலங்கைமான் கிளைத் தலைவர் R.முஹம்மது இல்யாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக வலங்கைமான் TNTJ மர்க்கஸ் இமாம் K.முஹம்மது ஜக்கரியா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
_________________________________________________
Home »
வலங்கைமான்.
» வலங்கைமான் கிளையில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !