06.01.10 (புதன்கிழமை) அன்று மாவட்ட தலைவர் A.S. அலாவுதீன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு நடைப்பெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர், இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.புதிய பள்ளிவாசல் இடத்திற்கு வசூல் செய்வதற்கு வெள்ளிகிழமை தோறும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்தல்.
2.இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
3.துணைத் தலைவர் A.T.அன்சாரி ராஜினாமாவை அடுத்து திருமங்கலக்குடி B.முஹம்மது இம்தியாஸ் அவர்களை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது.
4.மருத்துவ அணிச் செயலாளர் சித்திக் ராஜினாமாவை அடுத்து ஆவணியாபுரம் O.வரிசை முஹம்மது அவர்களை மருத்துவ அணிச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது.
5.தஞ்சை மாவட்டம் முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலின்டர் சரியான முறையில் விநியோகம் செய்யாத கேஸ் சிலிண்டர் நிர்வாகத்தை கண்டித்து 20.01.10 புதன்கிழமை காலை 10 மணிக்கு கோர்ட் எதிர்ப்புறம் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
_____________________________________________________________
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !