தஞ்சையில் தடையை மீறி ஆர்பாட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு
அண்மைச்செய்தி :
Home » » தஞ்சையில் தடையை மீறி ஆர்பாட்டம்

தஞ்சையில் தடையை மீறி ஆர்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்!
  • குழந்தைகளுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்!
  • தடையை மீறி ஆர்பாட்டம்!
  • பெண்கள் உள்பட பல ஆயிரம் பேர் கைது!


தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரம் முருகேசன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிறிதும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் சாதிக் மற்றம் இமாம் அலி ஆகியோர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 1 மாத காலமாக சிறையில் வாடி வருகின்றார்கள். எந்த தவறும் செய்யாத அப்பாவி முஸ்லிம்களான சாதிக் மற்றும் இமாம் அலி இருவர் மீதும் உள்னோக்கத்துடன் திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் D.S.P ரொசாரியோ ஆகிய இருவரும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அப்பாவிகள் இவர்கள் மீது பொய்வழக்கு தான் போடப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் D.S.P ரொசாரியோ, ஆய்வாளர் பழனிச்சாமி ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதை கண்டித்து தஞ்சை மாவட்டம் வடக்கு தெற்கு சார்பாக, 21-03-08 வெள்ளி அன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியே தீருவோம் என்று மாவட்ட நிர்வாகம் அறிப்பு செய்தனர். கைது செய்யப்படுவோம் என்ற செய்தி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவியது, கைது செய்யப்படுவோம் என்ற தெரிந்தும் மக்கள் கடலாய், பெண்கள் குழந்தைகளுடன் ஆர்பாட்டத்திற்கு மட்டும் அல்ல கைதுக்கே தயாராக வந்திருந்தனர். சரியாக 4:30 –க்கு ஆர்பாட்டம் துவங்கியது, ஆர்பாட்ட கோஷங்கள் தஞ்சையை பிலந்தது. கண்டன உரையை சகோ: அபூபக்கர் -தொண்டியப்பா (மாநில பொருளாளர்) அவர்கள் மற்றும் சகோ: ஜாபர் (தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர்) அவர்களும் நிகழ்த்திய உரை உருக்கமாகவும், ஆவேசமாகவும் அமைந்தது. 5:30 மணியளவில் கைது நடவடிக்கை துவங்கியது, இதில் 3000 –த்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கை குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர், இவர்களை நான்கு திருமண மண்டபங்களில் அடைத்தனர், பிறகு இரவு 7:30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.



ஆர்பாட்ட செய்தி அனைத்து பத்திரிக்கையிலும் இடம் பிடித்திருந்தது.




Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !


மாவட்ட நிர்வாகிகள்



தலைவர்:

H.ஜாபர் அலி : 87547 07666


செயலாளர்:

J.முஹம்மது பாரூக் : 99658 52468


பொருளாளர்:

A. அப்துல் ரஹ்மான் : 9944 33 8847


து.தலைவர்:

S.சிக்கந்தர் அலி : 93843 57357


து.செயலாளர்கள்:

சாதிக் பாட்சா 9159959911

மகாதீர் முஹம்மது : 9894 22 0097

A. முஹம்மது சாஹித் : 99447 08427

அய்யூப் கான் : 80564 62689

பரக்கதுல்லாஹ் : 95003 09529


மருத்துவரணி செயலாளர்:

வரிசை முஹம்மது : 98945 77133


மாணவரணி செயலாளர்:

நஜீர் அகமது 91765 25298


தொண்டரணி செயலாளர்:

சலிம் MISC : 95007 96289


வர்த்தகரணி செயலாளர்:

கபீர் அஹமது : 99947 66962

மாதாந்திர புள்ளி பட்டியல்

பதிவுகளின் தொகுப்பு