அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையச்ச மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம்
தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் TNTJ கிளை சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் J.ஆசிப் (கிளை செயலாளர்) அவர்கள் தலைமை தாங்கினார். A.T.அன்சாரி (மாவட்ட துணை செயலாளர்), M.F.இம்தியாஸ் (கிளை துணைத் தலைவர்),V.H. சபியுல்லாஹ் (கிளை பொருளாளர்), நபில் அஹமது (கிளை துணை செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சகோ: அர்ஷத் அலி (மாநில பேச்சாளர்) அவர்கள் “உலக மோகமும், இறை நினைவும்” என்ற தலைப்பிலும், சகோ: ரஹ்மத்துல்லாஹ் (TNTJ துபாய் மண்டல தலைவர் - தஞ்சை வடக்கு) அவர்கள் “உணரப்படாத தவறுகள்” என்ற தலைப்பிலும், சகோதரி: R.சுமையா (ஆசிரியை-அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி) அவர்கள் “குடும்பப் பொறுப்பு” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் R.சித்திக் (கிளை வர்த்தக அணி) அவர்கள் நன்றியுரை நல்கினார்கள். பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பாபநாசம் TNTJ கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !