அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் வேலைகள் தீவிரம்
இன்ஷாஅல்லாஹ் மே மாதம் 10 – 11 தேதிகளில்
தஞ்சை வல்லத்தில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடக்க இருப்பதால் அதன் பணிகள் தீவிரம் அடைந்தது வருகின்றது. தஞ்சையில் பார்க்கும் இடங்களிலெல்லாம் மாநாட்டிற்காக எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் காணப்பட்டன, மேலும் மாநாட்டு திடல் சீரமைப்பு பணியும்
12-.03.08 புதன் கிழமை அன்று தொடங்கியது மற்றும் மாநில, மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மாநாட்டு சம்பந்தமான ஆலோசனையும், கலந்துரையாடலும் நடத்தினர் மேலும் மாநாட்டு திடல் சீரமைப்பு பணியையும் பார்வையிட்டனர் இதில்
சர்புதீன் (மாநில நிர்வாகி),
ஜாபர் (தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர்),
சாதிக் (தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்), மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !