அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
- பள்ளிவாசல் இடத்தில் இந்துத்துவா பாசிச தீவிரவாதிகள் அத்துமீறல்…
- இந்துத்துவா தீவிரவாதிகள் கைவரிசை
- பள்ளிவாசல் இடத்தில் பிள்ளையார் சிலை
- மதக்கலவரத்தை ஏற்படுத்தும் இந்துத்துவா சக்தி
தஞ்சை மாவட்ட வடக்கு கும்பகோணம் தாலுக்காவை சார்ந்த திருநாகேஸ்வரம் R.V.நகரில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு பள்ளிவாசல் கட்டுவதற்கு நேற்று 04.05.2008 ஞாயிற்றுக்கிழமை பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் இன்று 05.05.08 அதிகாலையில் ஊர் மக்கள் சென்று பார்த்தபோது, பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் பிள்ளையார் சிலையும் நான்கு இந்துத்துவா கொடிகம்பங்களும் அங்கு ஊன்றப்பட்டிருந்தது. உடனே ஊர் ஜமாத்தார்கள் திருவிடைமருதூர் சர்க்கள் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் கும்பகோணம் தாசில்தார் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பழனிச்சாமியும், தாசில்தாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறப்பாக செயல்பட்டு சிலையையும், கொடியையும் அப்புரப்படுத்தினார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !