- மாநில செயலாளர் சிறப்புரை
- அன்நூர் ஆலிமா பங்கேற்பு
- மாற்றுமதத்தவருக்கு குர்ஆன் வழங்கப்பட்டது
தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கிமான் கிளையில் 26.04.2008 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் தவ்ஹீத் (ஏகத்துவ) எழுச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் A.ஷாஜஹான் (மாவட்ட தலைவர்) அவர்கள் தலைமை தாங்கினார்கள், A.S.அலாவுதீன் (மாவட்ட துணை செயலாளர்) மற்றும் சுவாமிலை ஜாபர் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள், சகோ: பக்கீர் முஹம்மது அல்தாஃபி “தவ்ஹீத் எழுச்சி மாநாடு ஏன்? எதற்கு?” என்ற தலைப்பிலும், சகோ: M.S.ரஹ்மத்துல்லாஹ் (தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் UAE) அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பிலும், சகோதரி: ஹதீஜா (ஆலிமா – அன்நூர் இஸ்லாமிக் கல்லூரி) அவர்கள் “இஸ்லாம் கூறும் பெண்ணுறிமை” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் M.முஹம்மது ரியாஜ் (கிளை தலைவர்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். இதில் ஏறாலமான ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இந்த பொதுக்கூட்டத்து ஏற்பாடுகளை வலங்கைமான் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
குறிப்பு: விவேகானந்தன் என்ற மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள்’ அந்த மேடையிலேயே வழங்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !