தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சுவாமிமலை கிளையில் 28.04.13 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
சகோதரி:ஆயிஷா ஆலிமா அவர்கள் இன்றைய உலக வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் உலக கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
பயானுக்கு பிறகு மக்தப் மதரசாவில் பயிலும் மாணவ, மாணவிகள் குர்ஆன் ஒப்புவித்தல் போட்டி நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பெருந்திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்.
----------------------------------------------------------------------------------------


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !