தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமாக அந்நூர்
இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியில், மாணவிகளின் பேச்சுத் திறனை வளர்க்கும்
முகமாக பல்வேறு சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்
வரிசையில், தீனியாத், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவிகளின், -
மக்களிடையே தூய குர்ஆன் - ஹதீஸ் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைக்க
ஏதுவாக, பேச்சுப் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.
- முதல் பரிசு: பஷிஹா
- இரண்டாம் பரிசு: சஃபானா
- மூன்றாம் பரிசு: சாரா
- ஆறுதல் பரிசு:ஃபெமினா இப்பரிசுகள் ரியாத் வாழ் அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.