தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 16.06.12 சனிக்கிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் மறுமையை மறந்த மனிதர்கள் என்ற தலைப்பிலும், சகோ:அப்துல்லாஹ் DAIS அவர்கள் ஊடகங்களின் பாரபட்சம் என்ற தலைப்பிலும், சகோதரி: சர்மிளா பானு ஆலிமா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் B முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட தொண்டரணி செயலாளர் கபீர் அகமது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சி மாவட்ட இணையத்தளம் www.tvtntj.net ல் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டு வெளிநாடு வாழ் சகோதரர்கள் பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
---------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !